அருப்புக்கோட்டை,அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் கோவிலில் ஜய ஆண்டு மாசி மாதம் 22-ம் நாள் (மார்ச் 6,2015) சுபநாளான வெள்ளிக்கிழமை அன்று சின்னமனூர் P.தங்கவேல்-காமாட்சியம்மாள் அவர்கள் நினைவாக,அவர்கள் வாரிசுகளால் ரூபாய் 9 இலட்சம் மதிப்பில் கொடிமரம் நிறுவப்பட்டு கவசம் சார்த்தப்பட்டது.
சின்னமனூர் P.தங்கவேல்-காமாட்சியம்மாள் அவர்கள் நினைவாக, அவர்கள் மகன்கள் T.துரைப்பாண்டியன் - சுருளி அம்மாள்,T.ராஜா-அன்னபாக்கியம் மற்றும் T.சந்தன மகாராஜன்-கலைமணி, அவர்களின் வாரிசுகளால் கொடிமரம் நிறுவப்பட்டு கவசம் சார்த்தப்பட்டது. 2015-ம் ஆண்டில், ஆண்டு தோறும் நடக்கும் அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மனை குலதெய்வமாக கும்பிடும் மக்களின் மாசி களரி திருவிழா , மார்ச் 13 அன்று ஆரம்பமானது. மாசி இறுதி வெள்ளி அன்று ஆரம்பமாகும் இத்திருவிழா,மூன்று நாட்கள் நடைபெறும். அதை முன்னீட்டு, கோவில் திருவிழாவின் ஆரம்பத்தை குறிக்கும் வண்ணம்,கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்.
அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் கோவில் திருவிழாவின் ஆரம்பத்தினை குறிக்கும் வண்ணம், மார்ச் 6,2015 அன்று கொடிமரம் முதல் முறையாக நிறுவப்பட்டு கவசமும் சாத்தப்பட்டது .
அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் அவளின் அருள் பெற்று அவள் நிழலில் இன்பம் காணும் , தாய் அவளின் அன்பிற்கும் கருணைக்கும் அருளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக P.தங்கவேல்-காமாட்சியம்மாள் அவர்கள் நினைவாக,அவர்கள் வாரிசுகள் தங்களால் இயன்ற இச்சிறு தொண்டினை தாய் அவள் பெயரில் புரிந்துள்ளனர்.
No comments:
Post a Comment