கொடிமரம்
கோயில் வழிபாட்டில் மூலவரை வணங்கியபின், பிரகாரத்தை வலம் வந்து
கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். இதை ஏன் செய்கிறோம் என்று
தெரிந்து கொண்டால் இதன் மகத்துவம் புரியும். வழிபாட்டிற்குச் செல்லும்போது
மனம், உடல் தூய்மையாக இருக்க வேண்டும். வீடு, பணிச் சிந்தனைகளை மறந்து
ஒருமித்த கருத்துடன் கோயிலில் நுழையவேண்டும். பலிபீடம் அருகே நின்று நான்,
எனது என்ற எண்ணத்தை மானசீகமாக விடுக்க வேண்டும். சந்நிதிக்குள் செல்லும்
போது மனித உடம்பு ஒரு நடமாடும் பேட்டரியாக(மின்கலம்) மாறி விடும்.
மின்காந்தசக்தி பேட்டரியில் சேர்வது போல, கருவறையில் உள்ள தெய்வீகசக்தி
உடம்புக்குள் குவியும். பிரகாரம் சுற்றி கொடிமரம் முன்பு சாஷ்டாங்க
நமஸ்காரம் செய்யும் போது, உடலுக்கு தேவையான ஆற்றல் போக, உடலில் இருக்கும்
அதிகப் படியான ஆற்றல் பூமிக்குள் இறங்கி விடும். அது கொடிமரம் வழியாக
மேலேறி பிரபஞ்ச சக்தியோடு (உலக சக்தி) இணையும். அதனால், தூயமனதோடு ஒருவர்
கோயிலில் வழிபட்டால் போதும். அதன் பயன் மக்களுக்கெல்லாம் கிடைக்கும்.
இதற்காகவே, கோயிலுக்குள் கொடிமரம் தவிர, மற்ற இடங்களில் சாஷ்டாங்க
நமஸ்காரம் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment