அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மனை குலதெய்வமாக கும்பிடும் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேரும் பெரும் திருவிழாதான் மாசி களரி. இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மதம் கடைசி வெள்ளியன்று நடைபெறும். இத்திருவிழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் பொது அனைத்து பங்காளிகளும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள் . எந்த ஊரில் குடியிருந்தாலும் இத் திருவிழாவின் போது அனைத்து பங்காளிகளும் வந்து விடுவார்கள். ஆட்டம் பாட்டம் என வெகு சிறப்பாக இத்திருவிழா கொண்டாடப்படும். பங்காளிகள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து அம்மனை வேண்டி நேர்த்திகடன்களை செலுத்துவார்கள். இரவு தாய்வீடு சென்று பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிசேகம் செய்யப்படும்.
Wednesday, October 2, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment