அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மனை குலதெய்வமாக கும்பிடும் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேரும் பெரும் திருவிழாதான் மாசி களரி. இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மதம் கடைசி வெள்ளியன்று நடைபெறும். இத்திருவிழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் பொது அனைத்து பங்காளிகளும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள் . எந்த ஊரில் குடியிருந்தாலும் இத் திருவிழாவின் போது அனைத்து பங்காளிகளும் வந்து விடுவார்கள். ஆட்டம் பாட்டம் என வெகு சிறப்பாக இத்திருவிழா கொண்டாடப்படும். பங்காளிகள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து அம்மனை வேண்டி நேர்த்திகடன்களை செலுத்துவார்கள். இரவு தாய்வீடு சென்று பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிசேகம் செய்யப்படும்.
Wednesday, October 2, 2013
Monday, September 30, 2013
கொடிமரம்
கொடிமரம்
கோயில் வழிபாட்டில் மூலவரை வணங்கியபின், பிரகாரத்தை வலம் வந்து
கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். இதை ஏன் செய்கிறோம் என்று
தெரிந்து கொண்டால் இதன் மகத்துவம் புரியும். வழிபாட்டிற்குச் செல்லும்போது
மனம், உடல் தூய்மையாக இருக்க வேண்டும். வீடு, பணிச் சிந்தனைகளை மறந்து
ஒருமித்த கருத்துடன் கோயிலில் நுழையவேண்டும். பலிபீடம் அருகே நின்று நான்,
எனது என்ற எண்ணத்தை மானசீகமாக விடுக்க வேண்டும். சந்நிதிக்குள் செல்லும்
போது மனித உடம்பு ஒரு நடமாடும் பேட்டரியாக(மின்கலம்) மாறி விடும்.
மின்காந்தசக்தி பேட்டரியில் சேர்வது போல, கருவறையில் உள்ள தெய்வீகசக்தி
உடம்புக்குள் குவியும். பிரகாரம் சுற்றி கொடிமரம் முன்பு சாஷ்டாங்க
நமஸ்காரம் செய்யும் போது, உடலுக்கு தேவையான ஆற்றல் போக, உடலில் இருக்கும்
அதிகப் படியான ஆற்றல் பூமிக்குள் இறங்கி விடும். அது கொடிமரம் வழியாக
மேலேறி பிரபஞ்ச சக்தியோடு (உலக சக்தி) இணையும். அதனால், தூயமனதோடு ஒருவர்
கோயிலில் வழிபட்டால் போதும். அதன் பயன் மக்களுக்கெல்லாம் கிடைக்கும்.
இதற்காகவே, கோயிலுக்குள் கொடிமரம் தவிர, மற்ற இடங்களில் சாஷ்டாங்க
நமஸ்காரம் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
அருள்மிகு நூதன விநாயகர்
அருள்மிகு நூதன விநாயகர்
எந்த ஒரு செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்பது பெரியோரின் வாக்கு மட்டுமல்லாமல் அதுவே சிறப்பும் ஆகும். அவ்வாக்கிற்கு ஏற்றார்போல் நமது அருள்மிகு வாழவந்த அம்மன் கோவிலிலும் உள்ளே நுழைந்தவுடன் ஈஸானிய மூலையில் அருள்மிகு நூதன விநாயகர் கோவில் வெகுசிறப்பாக அமைந்துள்ளது. நாம் செய்ய தொடங்கும் காரியங்களை மனதில் நினைத்து விநாயகரின் முன் நின்று பிரார்த்தனை செய்தாலே போதும் அக்காரியத்தில் உள்ள தடைகள் அனைத்தும் தகர்ந்து வெகுசுலபமாக அவை நிறைவேறும்.
Subscribe to:
Posts (Atom)