Ads 468x60px

Featured Posts

அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் கோவிலின் முன்புற தோற்றம்.

அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் - அன்பு நகர், அருப்புகோட்டை.

அருள்மிகு நூதன விநாயகர்

எந்த ஒரு செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்பது பெரியோரின் வாக்கு ....

கொடிமரம்

கோயில் வழிபாட்டில் மூலவரை வணங்கியபின், பிரகாரத்தை வலம் வந்து கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர்....

அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றி அம்மன்

அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் கோவிலின் கன்னி மூலையில் அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றி அம்மனுக்கு....

அருள்மிகு பாம்பாட்டி சித்தர் , அருள்மிகு மலையரசர், அருள்மிகு இருளப்பன், அருள்மிகு துர்க்கை அம்மன்

அருள்மிகு பாம்பாட்டி சித்தர் , அருள்மிகு மலையரசர், அருள்மிகு இருளப்பன், அருள்மிகு துர்க்கை அம்மன்.

Thursday, March 26, 2015

கோவில் கொடிமரம்,கொடிமர கவசம் !

          
          அருப்புக்கோட்டை,அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் கோவிலில் ஜய ஆண்டு மாசி மாதம் 22-ம் நாள் (மார்ச் 6,2015) சுபநாளான வெள்ளிக்கிழமை அன்று சின்னமனூர் P.தங்கவேல்-காமாட்சியம்மாள் அவர்கள் நினைவாக,அவர்கள் வாரிசுகளால் ரூபாய் 9 இலட்சம் மதிப்பில்  கொடிமரம்  நிறுவப்பட்டு கவசம் சார்த்தப்பட்டது.

  சின்னமனூர் P.தங்கவேல்-காமாட்சியம்மாள் அவர்கள் நினைவாக, அவர்கள் மகன்கள் T.துரைப்பாண்டியன் - சுருளி அம்மாள்,T.ராஜா-அன்னபாக்கியம் மற்றும்                 T.சந்தன மகாராஜன்-கலைமணி, அவர்களின் வாரிசுகளால் கொடிமரம் நிறுவப்பட்டு கவசம் சார்த்தப்பட்டது. 2015-ம் ஆண்டில், ஆண்டு தோறும் நடக்கும் அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மனை குலதெய்வமாக கும்பிடும் மக்களின் மாசி களரி திருவிழா , மார்ச் 13 அன்று ஆரம்பமானது.  மாசி இறுதி வெள்ளி அன்று ஆரம்பமாகும் இத்திருவிழா,மூன்று நாட்கள் நடைபெறும். அதை முன்னீட்டு, கோவில் திருவிழாவின் ஆரம்பத்தை குறிக்கும் வண்ணம்,கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்.


அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் கோவில் திருவிழாவின்  ஆரம்பத்தினை குறிக்கும் வண்ணம், மார்ச் 6,2015 அன்று கொடிமரம் முதல் முறையாக நிறுவப்பட்டு கவசமும் சாத்தப்பட்டது . 

அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மன் அவளின் அருள் பெற்று அவள் நிழலில் இன்பம் காணும் , தாய் அவளின் அன்பிற்கும் கருணைக்கும் அருளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக P.தங்கவேல்-காமாட்சியம்மாள் அவர்கள் நினைவாக,அவர்கள் வாரிசுகள் தங்களால் இயன்ற இச்சிறு தொண்டினை தாய் அவள் பெயரில் புரிந்துள்ளனர்.

Wednesday, October 2, 2013

மாசி களரி

அருள்மிகு ஸ்ரீ வாழவந்த அம்மனை குலதெய்வமாக கும்பிடும் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேரும் பெரும் திருவிழாதான் மாசி களரி.  இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மதம் கடைசி வெள்ளியன்று நடைபெறும். இத்திருவிழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் பொது அனைத்து பங்காளிகளும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள் .  எந்த ஊரில் குடியிருந்தாலும் இத் திருவிழாவின் போது அனைத்து பங்காளிகளும் வந்து விடுவார்கள்.  ஆட்டம் பாட்டம் என வெகு சிறப்பாக இத்திருவிழா கொண்டாடப்படும்.  பங்காளிகள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து அம்மனை வேண்டி நேர்த்திகடன்களை செலுத்துவார்கள். இரவு தாய்வீடு சென்று பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிசேகம் செய்யப்படும்.  
 

பூஜை நேரம் :

விபரம் சேகரிப்பில் ...

தகவல் :

மென்மேலும் இந்த வெப்சைட்டில் தகவல் சேர்க்க உங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவும். srivazhavanthal@gmail.com என்ற இமெயில்க்கு தகவல் மற்றும் போடோக்களை அனுப்பிவைக்கவும்.நன்றி !